சுவரில் துளைபோட்டு டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுவரில் துளைபோட்டு டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில்  தொழுவூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும்  இவரும் விற்பனையாளரும்  கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு இருந்தது பார்த்தனர். இதுகுறித்து கடை மேற்பார்வையாளர், செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  

கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள், பணம் கொள்ளை போகவில்லை என்று தெரிந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுவரில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாய் ரேம்போ மோப்பம் பிடித்தப்படி அப்பகுதியில் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

சூபர்வைசர் கொடுத்துள்ள புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

மூலக்கதை