காஞ்சி. அரசு மருத்துவமனை சீர்கேடு கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சி. அரசு மருத்துவமனை சீர்கேடு கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவனையின் சீர்கேடுகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில்  இருந்து மாணவி சரிகாவை உடனடியாக மேல் சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல  ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவர் பரிதாபமாக இறந்தார்.

மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடு கண்டித்தும்,  உயிரிழந்த மாணவி சரிகாவிற்கு நியாயம் கிடைக்கவேண்டும், விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உடனடியாக சிகிச்சை  அளிக்க மருத்துவமனை நிர்வாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விபத்து கால சிறப்பு மருத்துவப்பகுதியை உருவாக்கிடவேண்டும்’ என்று கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் வி. ஜெயந்தி, டிஒய்எப்ஐ மாவட்ட தலைவர் நந்தன், நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யுவராஜ் நன்றி கூறினார்.

.

மூலக்கதை