ஆபாச வீடியோ வெளியிட்டதால் திருநங்கை தற்கொலை முயற்சி: ஈரோட்டில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆபாச வீடியோ வெளியிட்டதால் திருநங்கை தற்கொலை முயற்சி: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு அருகே நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (21). திருநங்கை.

இவர் கடந்த 4 ஆண்டாக மற்றொரு திருநங்கை சங்கத்தில் இருந்து வந்தார். பின்னர் பெரியார்நகரில் உள்ள திருநங்கைகள் சங்கத்தில் சேர்ந்தார். சுஷ்மிதா முதலாவது சங்கத்தில் இருந்தபோது ஜாலியாக பேசிய வீடியோவும், ஆபாச வீடியோவும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் நேற்று முன்தினம் வெளியானது. இதை பார்த்த மற்ற திருநங்கைகள் சுஷ்மிதாவை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டுள்ளனர்.

இதனால், மனமுடைந்த சுஷ்மிதா நேற்று வீட்டில் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுஷ்மிதா சிகிச்சை பெற்று வருகிறார். ஆபாச வீடியோவை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வெளியிட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநங்கைகள் மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறியதாவது:ஈரோட்டில் 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்கிறோம்.

இதில் மற்றொரு தரப்பை சேர்ந்த திருநங்கைகள் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் தொடர்ந்து தகராறு செய்கின்றனர். தற்போது, தற்கொலைக்கு முயன்ற திருநங்கை சுஷ்மிதா ஏற்கனவே அந்த சங்கத்தில் இருந்தார்.

ஆனால், அவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த சங்கத்தை விட்டு எங்கள் சங்கத்திற்கு வந்து விட்டார். இதனால் மீண்டும் அவரை சங்கத்திற்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எப்போதோ ஜாலிக்காக பேசிய வீடியோவையும், ஆபாச வீடியோவையும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளனர்.

இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது மறுத்து விட்டார்கள்.

இந்த பிரச்னை தொடர்பாக சூரம்பட்டி போலீசில் புகார் அளித்த நிலையில் அவர்கள் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.

ஆபாச வீடியோவை பதிவிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


.

மூலக்கதை