உத்தரகண்ட்டில் டிரக்கின் பாரத்தை தாங்காமல் உடைந்து விழுந்த பாலம்

தினகரன்  தினகரன்

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் டிரக்கின் பாரத்தை தாங்காமல் பாலம் உடைந்து விழுந்தது. உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் இரும்புப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று இந்தப் பாலத்தில் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரக்கின் பாரத்தை தாங்காமல் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் இந்தச் சாலை மூடப்பட்டதையடுத்து கங்கோத்ரி, மனேரி, ஹர்சில் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுளன.

மூலக்கதை