சிறுமியுடன் பாலியல் உறவு : இந்திய இளைஞருக்கு சிறை

தினமலர்  தினமலர்

சிங்கப்பூர்: மொபைல் போன் வாங்க பணம் தருவதாக கூறி, சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட, இந்திய இளைஞருக்கு, சிங்கப்பூரில், ௧௦ மாத சிறை தண்டனை விதிக்கப்ட்டது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர், ஹரி குமார் அன்பழகன், ௨௫. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சமூக வலைதளம் ஒன்றில், தனக்கு புதிய மொபைல் போன் வாங்க யாராவது உதவி செய்யும்படி, பெண் ஒருவர் கூறியிருந்தார். இதைப் பார்த்த ஹரி குமார், உதவி செய்வதாக, அந்த பெண்ணுக்கு பதில் அனுப்பினார். இதையடுத்து, இருவரும் சமூக வலைதளம் மற்றும் மொபைல் போன் மூலம், தகவல்களை பரிமாறினர்; பின், 3,300 ரூபாய் தர, ஹரி குமார் சம்மதித்தார். அந்த பெண் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு ஹரிகுமார் சென்றார்.
அப்போதுதான், சமூக வலைதளத்தில் பேசியது, பெண் அல்ல; ௧௪ வயது சிறுமி என, ஹரி குமாருக்கு தெரிந்தது. ஆனாலும், ஹரிகுமார், அந்த சிறுமியின் சம்மதத்துடன், உடலுறவில் ஈடுபட்டார். பின், சிறுமிக்கு பணம் கொடுக்காமல் ஹரி தப்பியோடிவிட்டார்.
சிறுமி படிக்கும் பள்ளியில், அவரது நடவடிக்கைள் பற்றி தெரிய வந்தது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஹரிக்கும், சிறுமிக்கும் நடந்த உரையாடல்களை வைத்து, ஹரியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக, ஹரி குமாருக்கு, 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மூலக்கதை