நான்கு பெண்களை கடத்திய! - 28 வயதுடைய நபர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
நான்கு பெண்களை கடத்திய!  28 வயதுடைய நபர் கைது!!

நான்கு பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Pontoise (Val-d'Oise) இல் இச்சம்பவம் இட்ம்பெற்றுள்ளது. 
 
குறித்த கடத்தல் முயற்சிகள், இவ்வருடம் மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் இடம்பெற்றுள்ளது. குறித்த குற்றவாளி, 8 தொடக்கம் 12 வயது வரையான நான்கு பெண்களை, அவர்கள் பாடசாலை செல்லும் போது கடத்தியுள்ளான். வாயில் கையை வைத்து, ஒரு கட்டிடத்தின் தரை தளத்துக்கு கடத்தி சென்றுள்ளதாகவும், கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால் குறித்த நான்கு பெண்களும் தப்பித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் முகத்தை மறைத்து இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபட்டதால், காவல்துறையினர் குற்றவாளியை அடையாளம் கண்டுகொள்ள நீண்ட விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர். 40 ஆண்களுக்கு மேலாக விசாரணைகள் மேற்கொண்டு, இறுதியாக குறித்த நபரினை கைது செய்துள்ளனர். 
 
கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்கள் விசாரணையின் பின்னர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை