மார்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைதிறப்பு, பூஜை நேரம் மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மார்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைதிறப்பு, பூஜை நேரம் மாற்றம்

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மார்கழி 1 முதல் 29ம் தேதி முடிய அதாவது டிச. 16 முதல் வரும் ஜனவரி 13ம் தேதி வரை நடை திறப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:டிச. 16 முதல் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

3. 30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4. 45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 6 மணிக்கு காலசந்தி தீபாராதனை, 7. 30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8. 45 முதல் 9 மணி வரை உச்சிகால தீபாராதனை, மாலை 3. 30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6. 45 மணி முதல் 7 மணி வரை ராக்கால தீபாராதனை, 7. 30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையை தொடர்ந்து நடை அடைக்கப்படுகிறது.

ஜன. 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

1. 30 மணிக்கு விஸ்வரூபம், மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். ஜன.

2ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 2. 30 மணிக்கு விஸ்வரூபம், 3 மணிக்கு அபிஷேகமும் மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெறும். ஜன. 14ம் தேதி பொங்கல் அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படும்.

1. 30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையாளர் பாரதி தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை