பெல்ஜியத்தில் விசாரணை! - பா-து-கலே சிறைக்கு மாற்றப்படும் பயங்கரவாதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
பெல்ஜியத்தில் விசாரணை!  பாதுகலே சிறைக்கு மாற்றப்படும் பயங்கரவாதி!!

நவம்பர் தாக்குதலில் கைது  செய்யப்பட்டு, தற்போது பரிஸ் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் இம்மாதம் பெல்ஜியம் அழைத்துச் செல்லப்பட உள்ளான். 
 
பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட சாலா அப்தெல்சலாமை விசாரணை மேற்கொள்ளுவதற்கான பெல்ஜிய அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு அனுமதி அளித்த பிரெஞ்சு அரசு, பயங்கரவாதி அப்தெல் சலாமை விசாரணைகள் இடம்பெறும் நாட்களில் பிரான்சில் இருந்து அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய முடிவினை பிரெஞ்சு அரசு எடுத்துள்ளது. இம்மாதம் டிசம்பர் 18 ஆம் திகதியில் இருந்து 22 ஆம் திகதி வரை பெல்ஜியத்தில் விசாரணைகள் இடம்பெற உள்ளதால், குறித்த திகதிகளில் பிரான்சில் இருந்து அழைத்துச் செல்வதற்காக எல்லை மாவட்டமான பா-து-கலேயில் உள்ள சிறைக்கு மாற்றப்பட உள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாமை தீவிர பாதுகாப்பின் வைத்துக்கொள்வதற்காக, மிக தீவிரமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை