ஈரானில் பூகம்பம் வீடுகள் இடிந்தன

தினகரன்  தினகரன்

டெஹ்ரான் : ஈரானில் நேற்று மதியம் ஏற்பட்ட பூகம்பத்தில் 6 கிராமங்களில் உள்ள பழைய வீடுகள் சேதமடைந்தன. ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் பகுதியில் நேற்று மதியம் 12.13 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. ஹெஜ்டாக் என்ற நகரில் மையம் கொண்டிருந்த பூகம்பம், ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவாகியது. இந்த பூகம்பத்தால் 6 கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. ஒரு சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஈரானின் கெர்மன்ஷா பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் 620 பேர் பலியாயினர்.

மூலக்கதை