நாளை 2வது ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை: பதிலடி கொடுக்குமா இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை 2வது ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை: பதிலடி கொடுக்குமா இந்தியா

மொகாலி: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது. இதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கியது.

தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த இந்தியா வெறும் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது.

டோனி மட்டுமே 65 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாறினர்.



இந்த சூழலில், இந்தியா-இலங்கை இடையேயான 2வது ஒரு நாள் போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில், நாளை காலை 11. 30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றால் இலங்கை தொடரை கைப்பற்றி விடும்.

இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவது குறித்து சிந்திக்க முடியும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

.

மூலக்கதை