மேகாலயா ஜம்முவில் நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்

ஷில்லாங் :  மேகாலயாவில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். கிழக்கு கரோஹில்ஸ் மாவட்டத்தில் 60 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியிருந்தது. இதேபோல், ஜம்மு காஷ்மீரிலும் நேற்று அதிகாலை 4.28 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. 33 கிமீ ஆழத்தில் உருவாகியிருந்த இந்த நிலநடுக்கம் 4.5 ஆக ரிக்டரில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

மூலக்கதை