பிரித்தானியாவில் போக்குவரத்துத் தடங்கல்!
நான்காண்டு காணாத அளவில் பிரித்தானியாவில் பெய்த பனிமழையினால் வட ஐரோப்பா முழுவதும் போக்குவரத்துத் தடங்கல்கள் ஏற்பட்டன.
சிங்கப்பூர் நேரப்படி நள்ளிரவு பெய்த பனிமழை காரணமாக ஜெர்மனியிலும் பிரித்தானியாவிலும், 330க்கு மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
டுசல்டோர்ஃப் விமான நிலையம் பிற்பகல் வேளையில் சுமார் நான்கு மணிநேரம் மூடப்பட்டது.
அங்கு சில ரயில் சேவைகள் மாற்றிவிடப்பட்டுள்ளன.
போக்குவரத்துச் சேவை தடங்கல்களால் பாதிக்கப்பட்ட பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். விமானநியைம் பேரால் பாதிக்கப்பட்ட ஓரிடம் போல் மாறியுள்ளதாய் ஒரு பயணி வருணித்தார்.