பயங்கரவாத உலகில் மனித குணாம்சங்களை மதிப்பிடுவது அவசியம் : தல்வேர் பண்டாரி

தினமலர்  தினமலர்
பயங்கரவாத உலகில் மனித குணாம்சங்களை மதிப்பிடுவது அவசியம் : தல்வேர் பண்டாரி

மும்பை: பயங்கரவாத உலகில் மனித குணாம்சங்களை மதிப்பிடுவது அவசியம்என ஐக்கிய நாடுகளின் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கபட்ட இந்தியநீதிபதி தல்வேர் பண்டாரி கூறினார்.
ஐக்கிய நாடுகளின் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் முதன் முறையாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அன்பையும் இரக்கத்தையும், சட்டத்தின் விதிகளையும் இணைக்கும் செய்தியை கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: சட்டத்தின் விதி மீது கற்பனை செய்ய மடியாத பயங்கரவாத வன்முறை மற்றும் அப்பட்டமான தாக்குதல்கள் நிறைந்த உலகில் மனி குணாம்சங்களை மதிப்பிடுவது அவசியமானது. மனித உரிமை, சமத்துவம் , உள்ளுணர்வு, ஆகியவற்றின் மதிப்புகளை பாதுகாப்பதற்கும் , இரக்க மற்றும் சேவையின் மதிப்புகளை உந்துகின்ற குறிக்கோளுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும் என கூறினார்.

மூலக்கதை