கடும் பனிப்புயல்! - 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

PARIS TAMIL  PARIS TAMIL
கடும் பனிப்புயல்!  32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

பிரெஞ்சு வானிலை ஆய்வு மைய்யம் 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் பனிப்புயல் வீசும் எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகளுக்கு பரவலாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகளவு பனி கொட்டும் எனவும், புயல் காற்று வீசும் எனவும் 130 கிலோமீட்டர்கள் வேகம் வரை புயல்காற்று வீசும் எனவும் Météo France அறிவித்துள்ளது. 
 
Ariège, 
Charente,
Charente-Maritime, 
Haute-Garonne, 
Gironde, 
Nord, 
Pas-de-Calais, 
Pyrénées-Atlantiques,
Hautes-Pyrénées, 
Deux-Sèvres, 
Somme la Vienne, 
 Indre, 
 ‎Cher, 
 ‎Allier, 
 ‎Puy-de-Dôme, 
 ‎Loire, 
 ‎Rhone, 
 ‎Ain, 
 ‎Isère,
 ‎Drôme.
உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
வீதிகளில் வாகனங்களை செலுத்தும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மூலக்கதை