5வது முறையாக பாலோன் தி ஓர் விருது வென்றார் ரொனால்டோ: மெஸ்ஸி சாதனை சமன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
5வது முறையாக பாலோன் தி ஓர் விருது வென்றார் ரொனால்டோ: மெஸ்ஸி சாதனை சமன்

பாரிஸ்: ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரர்கள், பாலோன் தி ஓர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். 2017ம் ஆண்டுக்கான பாலோன் தி ஓர் விருதை, போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ வென்றுள்ளார்.

2008, 2013, 2014, 2016ம் ஆண்டுகளை தொடர்ந்து 5வது முறையாக பாலோன் தி ஓர் விருதை, கிறிஸ்டியானா ரொனால்டோ கைப்பற்றியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு விருது வழங்கப்பட்டது.



இதன் மூலம் பாலோன் தி ஓர் விருதை அதிக முறை வென்ற அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிகளின் முன்னணி வீரர் மெஸ்ஸியின் சாதனையை கிறிஸ்டியானா ரொனால்டோ சமன் செய்தார். 2009, 2010, 2011, 2012, 2015ம் ஆண்டுகள் என மெஸ்ஸியும் 5 முறை பாலோன் தி ஓர் விருதை கைப்பற்றியுள்ளார்.

அதாவது கடும் போட்டியாளர்களாக வர்ணிக்கப்படும் கிறிஸ்டியானா ரொனால்டோவும், மெஸ்ஸியும்தான் கடந்த 2008ம் ஆண்டு முதல் பாலோன் தி ஓர் விருதை மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் மெஸ்ஸி 2ம் இடத்தையும், உலகின் மிக விலையுயர்ந்த வீரராக கருதப்படும் பிரேசில் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகளின் நெய்மர் 3வது இடத்தையும் பிடித்தனர்.

கனவு பலித்தது ‘’மற்றொரு கனவு பலித்து விட்டது. எனது குடும்பம், நண்பர்கள், சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி’’ என விருது வென்றது குறித்து டிவிட்டரில் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறியுள்ளார்.


.

மூலக்கதை