இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்

கொழும்பு: இலங்கையில் இறுதி கட்டப்போரின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்று தருவதில் தமிழ் தேசிய கூட்டணி மெத்தனம் காட்டுவதாக அதிருப்தி அடைந்துள்ள தமிழ்க்கட்சிகள் அந்த கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இது குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்தவருமான சிவசக்தி ஆனந்தன் கூறியதாவது: தமிழ் தேசிய கூட்டணிக்கு பதிலாக தமிழர் விடுதலை கூட்டணி என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.



எங்கள் கட்சியுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. தமிழ் தேசிய கூட்டணியின் கொள்கையுடன் தமிழ் கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை.

மேலும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும். விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டணியை எதிர்த்து எங்களது கூட்டணி போட்டியிடும்.

இவ்வாறு ஆனந்தன் கூறினார்.

.

மூலக்கதை