பள்ளி வாலிபால் போட்டி பொள்ளாச்சி அணி சாம்பியன்

தினகரன்  தினகரன்
பள்ளி வாலிபால் போட்டி பொள்ளாச்சி அணி சாம்பியன்

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான 2வது மாநில வாலிபால் போட்டியின் ஆண்கள் பிரிவில், பொள்ளாச்சி என்ஜிஎன்ஜி அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. பள்ளிகளுக்கு இடையிலான 2வது மாநில வாலிபால் போட்டி சென்னையில்கடந்த 18ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பிரிவில் 36 பள்ளிகளும், மாணவிகள் பிரிவில்  20 பள்ளிகளும் பங்கேற்றன. மாணவிகள் பிரிவு பைனலில் நடப்பு சாம்பியனான சேலம், ஆத்தூர் பாரதி பெண்கள் மேனிலைப்பள்ளியும்,  சேலம் ஏஎன் மங்கலம் புனித மேரி மேனிலைப்பள்ளியும் மோதின. இதில் ஆத்தூர் பாரதி  பள்ளி அணி 25-9, 25-18, 25-18 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மாணவர் பிரிவு இறுதிப் போட்டியில் பொள்ளாச்சி என்ஜிஎன்ஜி மேனிலைப்பள்ளியும், திருச்சி காஜா மியான் மேனிலைப்பள்ளியும் மோதின. இப்போட்டியில் பொள்ளாச்சி அணி 25-20, 26-34. 25-17 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கம் பெற்றது. முகப்பேர் வேலம்மாள் அணி 3வது இடம் பிடித்தது.

மூலக்கதை