ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நிச்சயம்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நிச்சயம்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் செய்துகொண்ட ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் நிச்சயம் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் முதலில் ஒப்பந்தம் தொடர்பான தகவலை வெளியிட தயார் என்று கூறிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது அதனை வெளியிட முடியாது என்று கூறிவருகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தத்தில் ரகசியம் இல்லை என்று முதலில் கூறிவந்த நிர்மலா சீதாராமன், தற்போது அது மிக பெரிய ரகசியம் என்று கூறுகிறார் என்றும் ராகுல் கூறியுள்ளார். ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்து கேட்டல் என் கண்களை பார்த்து பேசவே பிரதமர் மோடி தயங்குகிறார் என்று ராகுல் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்து நிச்சயம் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது என தனது பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ரஃபேல் போர் விமானம் கொள்முதல்  பேரத்தில் பிரதமர் மோடியிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக  பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் உண்மையை பேச வில்லை என்றும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

மூலக்கதை