பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி அட்டைகள் கர்நாடக தேர்தல் கமிஷனின் முயற்சிக்கு ராகுல் பாராட்டு

தினகரன்  தினகரன்
பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி அட்டைகள் கர்நாடக தேர்தல் கமிஷனின் முயற்சிக்கு ராகுல் பாராட்டு

புதுடெல்லி : பார்வையற்ற வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், அவர்களுக்கு பிரெய்லி அட்டைகளை வழங்கும் கர்நாடக தேர்தல் கமிஷனின் முயற்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி எபிக் அட்டைகளை வழங்க அம்மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத்துக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :கர்நாடக தேர்தல் கமிஷனின் மிகச்சிறந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காகவே இந்த கடிதத்தை நான் எழுதியுள்ளேன். பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி அட்டைகளை வழங்குவது என்பது சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ள மிகச்சரியான நடவடிக்கை. இதன்மூலம் அனைத்து தரப்பினரும் வாக்களிப்பது சாத்தியப்படும். மாற்றுத் திறனாளிகள் அனைவரும் எளிதாக வாக்களிக்கும் வகையில், தேர்தல் கமிஷன் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். இத்தகைய நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆதரவை எப்பொழுதும் வழங்கும் என்றும் நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை