உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தவறியதால் ஓராண்டில் ரூ.3558 கோடி இழப்பீடு: ராமதாஸ் கண்டனம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தவறியதால் ஓராண்டில் ரூ.3558 கோடி இழப்பீடு நிகழ்ந்ததாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசின் ரூ.3558 கோடி வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை அதிமுக அரசு வாங்கவில்லை எனவும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியால் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் சரியாக நடைபெறவில்லை எனவும் கூறினார்.