மீண்டும் வருகிறது, ‘டூட்டி டிரா பேக்’ : சிறிய ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவர்

தினமலர்  தினமலர்
மீண்டும் வருகிறது, ‘டூட்டி டிரா பேக்’ : சிறிய ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவர்

புதுடில்லி: ஏற்­று­ம­தி­யில் ஈடு­பட்­டுள்ள, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பயன் பெறும் நோக்­கில், மீண்­டும், ‘டூட்டி டிரா பேக்’ திட்­டம் அம­லுக்கு வர உள்­ளது.இந்த திட்­டத்­தில், இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு செலுத்­தும் வரியை, மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­க­ளாக ஏற்­று­மதி செய்­யும் போது, திரும்­பப் பெற­லாம்.ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்த பின், இந்த திட்­டம் கைவி­டப்­பட்­டது. இத­னால், கைவி­னைப் பொருட்­கள், ஜவுளி, தோல் பொருட்­கள் உட்­பட, அதிக அள­வில் தொழி­லா­ளர்­களின் பங்­க­ளிப்­பை கொண்ட சிறிய, நடுத்­தர ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­பட்­டன.இதை­ய­டுத்து, இத்­திட்­டத்தை மீண்­டும் அம­லுக்கு கொண்டு வரு­வது குறித்து ஆய்வு செய்ய, ஜி.கே.பிள்ளை தலை­மை­யி­லான குழு அமைக்­கப்­பட்­டது. இக்­கு­ழு­வின் அறிக்கை, விரை­வில் மத்­திய அர­சுக்கு வழங்­கப்­பட உள்­ளது.‘‘இதைத் தொடர்ந்து, அக்., 1 முதல், மீண்­டும் டூட்டி டிரா பேக் திட்­டம் அம­லா­கும்.‘‘மேலும், ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் நிதித் தேவை­களை சமா­ளிக்க உத­வும், ‘இ – வாலட்’ திட்­ட­மும் அம­லுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது,’’ என, இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர், கணேஷ் குமார் குப்தா தெரி­வித்­து உள்­ளார்.

மூலக்கதை