குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு தூக்கு : ராஜஸ்தான் கோர்ட் அதிரடி

தினகரன்  தினகரன்
குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு தூக்கு : ராஜஸ்தான் கோர்ட் அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 7 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில்  பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.நாடு முழுவதும் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறையாக பலாத்கார குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பிண்டு (19) என்ற வாலிபர், பக்கத்து வீட்டில் இருந்த 7 மாத குழந்தையை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், பிண்டுவுக்கு மரண தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகேந்திரா அகர்வால் உத்தரவிட்டார்.

மூலக்கதை