50 ஆண்டுக்கு முன் மாயமான விமான பாகங்கள் கிடைத்தன

தினகரன்  தினகரன்
50 ஆண்டுக்கு முன் மாயமான விமான பாகங்கள் கிடைத்தன

டேராடூன்: இமாச்சல பிரதேசத்தில் ராஜிவ் ரவாத் என்பவர் தலைமையிலான மலையேற்றக் குழுவினர், ‘சந்திரபாகா-13’ என்ற மலைப் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, டாக்கா என்ற பனி ஆற்றின் அருகே விமானம் ஒன்றின் உடைந்த பாகம் கிடந்தது. அதன் அருகே தலை கவிழ்ந்த நிலையில் அழுகிய வீரர் ஒருவரின் சடலமும் இருந்தது. உத்தரகாசி திரும்பிய ராஜிவ் ரவாத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் கண்டுபிடித்த விமான பாகம், சடலம் பற்றிய படங்கள் ராணுவத்துக்கு அனுப்பினோம்.  இதில் விமானம் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது என்பதும்  1968ல் விபத்துக்குள்ளானது என்றும் தெரிய வந்துள்ளது. இதேபோல் இறந்து கிடந்தது வீரர் என்று தெரியவந்துள்ளது’’ என்றார்.

மூலக்கதை