கொதிகலனுக்குள் கிடந்த இராட்சத மலைப்பாம்பு! - தீயணைப்பு படையினர் மீட்டனர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கொதிகலனுக்குள் கிடந்த இராட்சத மலைப்பாம்பு!  தீயணைப்பு படையினர் மீட்டனர்!!

பழுதடைந்த கொதிகலன் ஒன்றுக்குள் இராட்சத மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் ஒன்று Maine-et-Loire இல் இடம்பெற்றுள்ளது. 
 
ஒரு மீற்றரும் 40 செண்டிமீட்டரும் கொண்ட இந்த மலைப்பாம்பு பழுதடைந்த கொதிகலனுக்குள் வசித்துள்ளது. கொதிகலன் திருத்துபவருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்து, பின்னர், திருத்துபவர் கொதிகலனின் அடிப்பாகத்தினை பிரித்து பார்க்கும் போது உள்ளே மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கொதிகலன் பழுதடைந்த நிலையில் இது எத்தனை நாட்களாக இங்கு வசித்துள்ளது என்பது தொடர்பாக அறியமுடியவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
பின்னர் பாம்பு மீட்கப்பட்டு வனவிலங்குகள் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த மலைப்பாம்பு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் பல விருப்புக்களை குவித்து வருகின்றது. 
 
 

மூலக்கதை