Alexandre Benalla - வன்முறை வழக்கில் கைதுசெய்யப்பட்டவருக்கு இன்று திருமணம்!!
போராட்டக்காரர்களை தாக்கிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட இம்மானுவல் மக்ரோனின் மெய்காப்பாளருக்கு இன்று சனிக்கிழமை திருமணம் இடம்பெற இருந்து, தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
Hauts-de-Seine இன் Issy-les-Moulineaux பகுதியில் உள்ள நகர மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் Alexandre Benalla க்கு திருமணம் இடம்பெற உள்ளதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மே 1 ஆம் திகதி, மே தின கூட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவரை மிக மோசமாக தாக்கியிருந்தார். தாக்குதலில் ஈடுபட்ட காணொளி கடந்த புதன்கிழமை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவருடன் சேர்த்து மேலும் மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் Alexandre Benalla க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தகவல் இன்று வெளியானது. தவிர, அவருக்கு எலிசே மாளிகையில் பணி நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.