2.16 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

தினகரன்  தினகரன்
2.16 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: அமர்நாத் பனிலிங்கத்தை நேற்று முன்தினம் மாலை வரை 2.16 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 28ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை வரை 2.16 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.இதனிடையே ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த உதய் ராம் அகர்வால் என்பவர் திடீரென சுயநினைவை இழந்து மயங்கி விழுந்ததார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் ஒடிசாவை சேர்ந்தவர்.

மூலக்கதை