கொழும்பில் 5 நாட்களுக்கு மின்வெட்டு!

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பில் 5 நாட்களுக்கு மின்வெட்டு!

5 நாட்களுக்கு கொழும்பின் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
132 கிஹா வெட் மின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணி காரணமாகவே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
 
இதற்கமைய, கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
 
அத்துடன், குறித்த பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிகளில் இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்படும் எனவும் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலக்கதை