இடியுடன் கூடிய அடை மழை! - 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
இடியுடன் கூடிய அடை மழை!  19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக இடியுடன் கூடிய பலத்த மழை பொழியும் என 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
பிரான்சின் தென்கிழக்கு பகுதிகளான 
Ain (01), 
Allier (03), 
Ardèche (07), 
Aude (11), 
Aveyron (12), 
Cantal (15), 
Drôme (26), 
Gard (30), 
Hérault (34), 
Isère (38), 
Loire (42), 
Haute-Loire (43), 
Lozère (48), 
Puy-de-Dôme (63), 
Rhône (69), 
Savoie (73), 
Haute-Savoie (74),
Tarn (81)
 
ஆகிய 19 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடைகாலத்தில் பதிவாகும் முதல் அடை மழை இதுவாகும் என பிரெஞ்சு வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. 
 
தவிர, 30 தொடக்கம் 50 mm வரையான மழை பொழிவு பதிவாகும் எனவும், 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை