சற்று முன் : கைது செய்யப்பட்ட Alexandre Benalla - பணி நிறுத்தம் செய்ய ஜனாதிபதி மாளிகை தீர்மானம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சற்று முன் : கைது செய்யப்பட்ட Alexandre Benalla  பணி நிறுத்தம் செய்ய ஜனாதிபதி மாளிகை தீர்மானம்!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெய்பாதுகாவலர் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 
மே 1, மேதின கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை Alexandre Benalla மிக மோசமாக தாக்கிய காணொளி நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியானதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் மிக மோசமாக தாக்கியுள்ளார். குறிப்பாக குறித்த ஆண் கெஞ்சி கேட்டும் அவர் தாக்குவதை நிறுத்தவில்லை. இந்த சம்பவத்தின் போது மேலும் உடனிருந்த மூன்று காவல்துறையினரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெய் பாதுகாவலராக பணி புரிந்த Alexandre Benalla முன்னர் 15 நாட்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது நிரந்தரனாக பணி நீக்கம் செய்வது குறித்து தாம் தீர்மானம் எடுத்துவருவதாக எலிசே மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை