துல்கர் சல்மான் படத்துக்கு மசாலா காபி குழுவினரின் இசை

தினமலர்  தினமலர்
துல்கர் சல்மான் படத்துக்கு மசாலா காபி குழுவினரின் இசை

துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்து வரும் படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் யார் என்பதை அறிவித்துள்ளனர்.

கேரளாவில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'மசாலா காபி என்ற இசைக் குழுவினர் தான் 'கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால்' படத்திற்கு இசை அமைக்கிறார்கள்! 2016-ல் வெளியாகி பரவலாக பேசப்பட்ட 'உறியடி' படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான் என்பது கூடுதல் தகவல். உறியடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'சோலோ' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கும் இவர்கள் இசை அமைத்தனர்.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் மூன்றாவது நேரடி தமிழ் படம் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும், மலையாளத்தில் எடுத்து தமிழில் டப் செய்யப்படுவதாகவே மீடியேட்டர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது!

மூலக்கதை