திகிலுடன் காத்திருக்கும் த்ரிஷா

தினமலர்  தினமலர்
திகிலுடன் காத்திருக்கும் த்ரிஷா

த்ரிஷா நடித்து வெளியாகப்போகும் மூன்றாவது ஹாரர் படம் மோகினி. இந்த படத்தில் அவர் இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளார். முதலில் சுந்தர்.சியின் அரண்மனை-2 படத்தில் நடித்தார். அதன்பிறகு நாயகி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்து த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டது.

இருப்பினும் அதையடுத்து மாதேஷ் இயக்கத்தில் மோகினி என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. ஜூலை 27-ந்தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படம் தன்னை வெற்றிப்பட நாயகியாக்கி விடும் என்று சினிமா நண்பர்களிடம் நம்பிக்கையுடன் த்ரிஷா சொல்லி வந்தபோதும், நாயகி படம் கொடுத்த தோல்வி காரணமாக மனதளவில் திகிலுடனேயே காணப்படுகிறார் த்ரிஷா.

மூலக்கதை