சோம்ப்ஸ்-எலிசே கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்குச் சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ்எலிசே கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்குச் சிறை!!

கடந்த திங்கட்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில், கூட்டத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனை வழங்கபட்டுள்ளது. 
 
உலக்கிண்ணத்தில் வெற்றி பெற்று பரிஸ் திரும்பிய வீரர்கள், சோம்ப்ஸ்-எலிசேயில் ஆயிரக்கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் பேரூந்தில் ஊர்வலம் வந்தார்கள். அதன் போது 50 வயதுடைய நபர் 21 வயதுடைய பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். குறித்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போதும் அமைதியாக இருக்கும் குணம் என அடையாளப்படுத்தப்பட்ட குறித்த நபருக்கு தற்போது 4 மாதங்கள் சிறைத்தண்டனையும், 18 மாதங்கள் பணி நிறுத்தமும் வழங்கப்பட்டுள்ளது. 
 
குறித்த திருமணமான நபர் எவ்வித குற்றவியல் தடையங்களும் இல்லாதவர் எனவும், சமீபத்திய நாட்களில் மனதளவில் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளில் அவர் தெரிவிக்கும்போது, 'குறித்த பெண் தனக்கான இடத்தை தராமல் மறைத்துக்கொண்டு நின்றார்!' என தெரிவித்துள்ளார். பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

மூலக்கதை