புதிய சாதனை படைக்க தயாராகும் துல்கர் சல்மான்

தினமலர்  தினமலர்
புதிய சாதனை படைக்க தயாராகும் துல்கர் சல்மான்

மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் துல்கர் சல்மான், தென்னிந்திய நாயகன் என்கிற பட்டத்தையும் தாண்டி தேசிய நடிகர் என சொல்லும் விதமாக தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் இந்தியில் முதன்முதலாக நடித்துள்ள கர்வான் என்கிற படம், வரும் ஆக-3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்தவருடம் தெலுங்கில் தனது முதல் படமாக மகாநதியில் நடித்து அங்கேயும் வெற்றிகரமான நடிகர் என்கிற இமேஜை பெற்றுவிட்டார் துல்கர் சல்மான். மேலும் தமிழில் அவர் நடித்து முடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, மலையாளத்தில் அவர் தற்போது நடித்துவரும் ஒரு யமண்டன் பிரேமகதா படமும் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீசாக இருக்கிறது.

அந்தவிதமாக ஒரே வருடத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழி படங்களில் நடித்த ஒரே நடிகர் என்கிற பெருமையை சமீபகாலத்திய நடிகர்களில். அதுவும் குறிப்பாக மலையாள நடிகர்களில் பெறப்போகும் நடிகர் துல்கர் சல்மானாகத்தான் இருக்க முடியும்.

மூலக்கதை