ஓல்னே-சூ-புவா - துப்பாக்கி முனையில் €150,000 கொள்ளை!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஓல்னேசூபுவா  துப்பாக்கி முனையில் €150,000 கொள்ளை!!

ஆயுத முனையில் வாகனம் ஒன்றை தாக்கி €153,905 யூரோக்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று ஓல்னே-சூ-புவாவில் இடம்பெற்றுள்ளது. 
 
செந்தனியில் உள்ள துருக்கிய வியாபாரிகளுக்கிடையே இடம்பெறும் வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் பணம் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. அதன்போது ஆயுதமுனையில் அப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் Aulnay-sous-Bois இல் குறித்த வாகனம் வந்துகொண்டிருக்கையில் வழிமறிந்த முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் வாகத்தில் இருந்தவர்களை மிக மோசமாக தாக்கி, ஆயுத முனையில் 153,905 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வானத்துக்கு தீ வைத்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 
 
பணத்தினை கொள்ளையிட்டுச் செல்லும் வழியில் மற்றொரு மகிழுந்து ஒன்றில் இருந்தும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு, மகிழுந்தையும் எரியூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. செந்தனி காவல்துறையினர் தெரிவிக்கும்போது, மிக தெளிவாக திட்டமிட்டு இந்த கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றனர். கொள்ளையர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்!' என தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

மூலக்கதை