பணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்! - இருவர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்!  இருவர் கைது!!

காவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் பிரெஞ்சுத் தீவான Corsica இல் உள்ள de Bastia காலநிலையத்துக்கு குறித்த அதிகாரி பணிக்குச் சென்றார். அப்போது எதிர்பட்ட இரண்டு இளைஞர்கள் குறித்த அதிகாரியை மிக மோசமாக தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது அதிகாரி சாரண உடையில் இருந்ததாக அறியமுடிகிறது. தாக்குதல் மேற்கொண்ட இருவரும் 16 வயதுடையவர்கள் எனவும், குறித்த இருவரும் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறியமுடிகிறது. 
 
தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். தலையில் பலமாக அடிபட்டுள்ளதாக அறியமுடிகிறது. இத்தகவலை Préfète de Corse தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதிகாரிக்கு உயிராபத்து எதுவும் இல்லை எனவும், தாக்குதலுக்குரிய காரணம் குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 

மூலக்கதை