சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரமும் தமிழக அரசுக்கு உண்டு என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.