சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து  A7 வீதியில் விபத்துக்குள்ளானது!  14 பேர் காயம்!!

சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். 
 
பரிசில் இருந்து கோடை விடுமுறைக்காக Mâcon நகருக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பேரூந்தில் சிறுவர்களும் அவர்களின் பாதுகாவலர்களும் இருந்துள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 3 மணி அளவில் A7 வீதியில் லியோன் நகரை நோக்கி செல்லும் வீதியில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் 10 சிறுவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் Chalon-sur-Saône மற்றும் Mâcon இல் உள்ள மருத்துவமனைக்கு உலங்குவானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டனர். 
 
விபத்து பாரிய அளவில் இடம்பெற்றிருந்தாலும், உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. 9 தொடக்கம் 14 வரையுள்ள சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி வரை போக்குவரத்து தடைப்பட்டது. கோடை விடுமுறை காலம் என்பதால் வீதியில் பல வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தது. விபத்தை தொடர்ந்து பல கிலோமீட்டர்களுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை