20 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - ஒருவர் பலி!!
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் 82 வயதுடைய எண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை 23.40 மணி அளவில், பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் 14 rue du Retrait வீதியில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது. தீயணைபு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்தனர். குறித்த கட்டிடத்தின் இரண்டு பகுதிகளில் இருந்து தீ பரவியுள்ளது. கட்டிடத்தில் வசித்த அனைவரும் ஒய்வுபெற்று வரும் முதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் போராடினர். அதற்குள் கட்டிடத்தில் இருந்த 20 முதியவர்கள் துரித கதியில் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் 82 வயதுடைய பெண்மணி ஒருவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. தீயில் கருகி அவர் உயிரிழந்துள்ளார். கட்டிடத்தின் மூன்றாவது தளம் முற்றாக எரிந்துள்ளது. தீ பற்றியது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.