சைகை மொழியில் பேசும் கொரில்லாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!
சைகை மொழியில் பேசும் கொரில்லாவான கோக்கோ நேற்று இறந்தது. அதற்கு வயது 46.
அது உறக்கத்திலேயே இறந்ததாக கலிஃபோர்னியாவில் இருக்கும் கொரில்லா ஆய்வகம் தெரிவித்தது.
கோக்கோ கொரில்லா ஆங்கில மொழியையும் சிறிதளவு புரிந்துகொள்ளும் திறமை வாய்ந்தது.
அது 1971ஆம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் பிறந்தது.
கோக்கோவைப் பற்றி பல ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன.
கொரில்லா மாண்ட செய்தியைத் தொடர்ந்து அதன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அனுதாபங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.