அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மாநில தலைவன் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, யாத்திரை செல்லும் பாதையில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ராணுவ உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அமர்நாத் யாத்திரை செல்லும் வழி எங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு ஒன்றை பாதுகாப்பு படை வீரர்கள் நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்டனர். ஆனால், அங்கிருந்த தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை