திருப்பதி கோயிலில் சுரங்கம் தோண்டப்படுகிறதா? தேவஸ்தானம் மறுப்பு

தினகரன்  தினகரன்
திருப்பதி கோயிலில் சுரங்கம் தோண்டப்படுகிறதா? தேவஸ்தானம் மறுப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகாருக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பதி கோயில் மடப்பள்ளியில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டினார்கள் என்பது முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு. இதற்கு பதில் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரி சீனிவாச ராஜு மடப்பள்ளியில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடந்தது என்று தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ரமண தீட்சிதலு கூறியுள்ள புகாரிலும் உண்மையில்லை என்றார் சீனிவாச ராஜு. பூஜையை விரைவாக முடிக்குமாறு அர்ச்சர்களுக்கு அழுத்தம் தருவதாக கூறுவதும் பொய்யானது என்றார் அவர். வேண்டுமென்றே அவர் வீண்பழி சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை