68 ஆடம்பர மகிழுந்துகளை திருடிய பலே திருடர்கள்! - பொறி வைத்து பிடித்த காவல்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
68 ஆடம்பர மகிழுந்துகளை திருடிய பலே திருடர்கள்!  பொறி வைத்து பிடித்த காவல்துறையினர்!!

விமான நிலைய தரிப்பிடத்தில் இருந்து கண் சிமிட்டும் நொடிக்குள் ஆடம்பர மகிழுந்துகளை திருடும் பலே கொள்ளையர்களை காவல்துறையினர் பொறி வைத்து பிடித்துள்ளனர். 
 
கடந்த செவ்வாய்க்கிழமை Évry நகரில், ஒன்பது இளம் கடத்தல்காரர்களை சுற்றி வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து ஆடம்பர மகிழுந்தான லாண்ட் ரோவர் (Land Rover) மகிழுந்துகளை ஒரு சில நிமிட இடைவெளிக்குள் திருடிச்சென்றுள்ளனர். இதுவரை இவர்கள் மொத்தமாக 68 அதேவகை மகிழுந்துகளை திருடியுள்ளனர். ஒவ்வொரு நாள் இரவிலும் பரிசின் புறநகர் வீதிகளுக்குள்ளால் குறித்த மகிழுந்துகளை கடத்தியுள்ளனர். கடத்திய மகிழுந்துகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். 
 
மிகவும் பாதுகாப்பு கொண்ட லாண்ட் ரோவர் வகை மகிழுந்துகளை இவர்கள் மிகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பை உடைத்துள்ளனர். கடத்தல்காரர்கள் அனைவரும் 18 தொடக்கம் 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Val-de-Marne மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரியில் இருந்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு செய்து, மொத்த கொள்ளையர்களையும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

மூலக்கதை