நீதிபதிகள் பற்றாக்குறை! - போதை மருந்து கடத்தலில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை!!

PARIS TAMIL  PARIS TAMIL

போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஏழு நபர்கள், நீதிபதி பற்றாக்குறை காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Val-d'Oise இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
கடந்த செவ்வாய்க்கிழமை, Pontoise குற்றவியல் நீதிமன்றத்தில் ஏழு நபர்கள் விசாரணைகளுக்காக அழைத்துவரப்பட்டனர். குறித்த நபர்கள் நெதர்லாந்தில் இருந்து கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப்பொருட்களை கடத்திவந்ததாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை மேற்கொள்ள நீதிபதிகள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இதுவே முதன் முறை என்பதும், கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் நீதி மன்றத்தில் ஓப்படைக்கவேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில், குறித்த நபர்களை தொடர்ந்து காவல்நிலையத்திலும் வைத்திருக்க முடியாது என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை