காஷ்மீர் விவகாரம் பாஜவை வரலாறு மன்னிக்காது: சிவசேனா கட்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் விவகாரம் பாஜவை வரலாறு மன்னிக்காது: சிவசேனா கட்சி

மும்பை: காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை பாஜ அண்மையில் வாபஸ் பெற்றது. இதை தொடர்ந்து முதல்வர் பதவியை மெகபூபா ராஜினாமா செய்தார்.

அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா. ஜவுடன் கூட்டணி ஆட்சி செய்துவரும் சிவசேனா கட்சி அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி குழந்தையுடன் விளையாடுவதை போன்று இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்ட பின்னர் கூட்டணி ஆட்சியில் இருந்து பா. ஜ. விலகியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாமல் தற்போது காஷ்மீரில் மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது, பெரும் எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் தீவிரவாதத்திற்கு பலியாகியுள்ளனர்.

இந்த அராஜகங்கள் எல்லாம் பா. ஜ.

கூட்டணி ஆட்சியில் தான் நடந்தேறியது. ஆனால், மெகபூபா முப்தியின் பி. டி. பி கட்சியின் மீது அனைத்து பழிகளையும் சுமத்திவிட்டு தான் ஒரு புனிதமான கட்சி என்பது போல் பா. ஜ. க கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது. காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை மோடி உருவாக்குவார் என்ற நம்பிக்கையிலேயே பா. ஜ. விற்கு மக்கள் வாக்களித்தனர்.

ஆனால், பா. ஜ. கூட்டணி ஆட்சியை விட கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே பரவாயில்லை எனும் மனநிலைக்கு அம்மாநில மக்கள் வந்துவிட்டனர்.

பாஜவின் பேராசையே அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க தூண்டியது, அந்த பேராசைக்காக காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துவிட்டார்கள். வரலாறு ஒருபோதும் பாஜகவின் செயலை மன்னிக்காது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை