Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் மகிழுந்துகளுக்கு தீ வைப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் மகிழுந்துகளுக்கு தீ வைப்பு!!

நேற்று புதன்கிழமை நள்ளிரவு, Fresnes சிறைச்சாலை அதிகாரிகளுடைய மூன்று மகிழுந்துக்கள் தீ மூட்டப்பட்டுள்ளன. குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 
 Val-de-Marne இல் உள்ள Fresnes சிறைச்சாலையின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் மூன்று மகிழுந்துகளே தீயூட்டப்பட்டுள்ளன. 12.20 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயங்கர வெடிப்பு சத்தத்துடன் மகிழுந்து வெடித்து எரிந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை Haÿ-les-Roses பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 
தவிர, இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்திற்கு முன்பாக இதுபோன்று சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மகிழுந்து எரியூட்டப்பட்டிருந்தது.

மூலக்கதை