சிகரெட் வழங்க மறுத்தவருக்கு கத்திக்குத்து! - நள்ளிரவில் சம்பவம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிகரெட் வழங்க மறுத்தவருக்கு கத்திக்குத்து!  நள்ளிரவில் சம்பவம்!!

சிகரெட் வழங்க மறுத்த காரணத்துக்காக நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். தொடரூந்து நிலையத்துக்கு அருகே, நள்ளிரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் Toulouse (Haute-Garonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Saouzelong நிலையத்துக்கு அருகே நின்றிருந்த நபர் ஒருவரிடம், எதிரே வந்த நபர் ஒருவர் சிகரெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர் கூரான கத்தி ஒன்றின் மூலம் தாக்கியுள்ளார். அதன் பின்னர் தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த நபர் காயத்தை கைகளால் பிடித்துக்கொண்டு, 100 மீட்டர்கள் வரை நடந்து சென்று, பிறிதொரு நபரிடம் நடந்தைக் கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். 
 
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை