தூக்கில் தொங்கிய 19 வயது அகதி! - அகதி முகாமில் பரபரப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
தூக்கில் தொங்கிய 19 வயது அகதி!  அகதி முகாமில் பரபரப்பு!!

பா-து-கலேயில் அகதிகளால் உருவாக்கப்பட்ட அகதி முகாம் ஒன்றில், 19 வயதுடைய அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளான். அன்றைய நாளில் அவனுக்கு மனநல மருத்துவரை சந்திப்பதற்குரிய முன்அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 
 
பா-து-கலேயின் Croisilles பகுதியில் இச்சம்பவம், நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் அகதிகள் எப்படியேனும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடும் நோக்கில் வசிக்கின்றனர் என்பது வாசகர்கள் அறிந்ததே. தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட குறித்த 19 வயதுடைய இளம் அகதி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி தான் இந்த முகாமுக்கு வந்திருந்துள்ளான். இப்பகுதி அகதி முகாமில் வசிப்பவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மனநல மருத்துவரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன என அப்பகுதி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர் Guillaume Alexandre, ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
 
தற்கொலை செய்துகொண்ட குறித்த அகதிக்கும், நேற்று மனநல மருத்துவரை சந்திப்பதற்குரிய முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிச்சடங்ககு நேற்று மாலை இடம்பெற்றது.  
 

மூலக்கதை