பரிஸ் - ஓய்வூதியம் பெறுபவர்களிடம் நூதன கொள்ளை! - முதியவருக்கு சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  ஓய்வூதியம் பெறுபவர்களிடம் நூதன கொள்ளை!  முதியவருக்கு சிறை!!

பரிசில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் நூதன முறையில் கொள்ளையிட்ட முதியவர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் மற்றும் 15 ஆம் வட்டாரங்களில் குறித்த 72 வயதுடைய முதியவர், காவல்துறையினர் போன்று போலியான அடையாள அட்டையுடன் உள் நுழைந்து அவர்களிடம் பணம் பெற்றுள்ளார். இதுவரை 74 தொடக்கம் 90 வயதுகளுடைய பலர் இவரின் நூதன திருட்டில் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்துள்ளனர். 
 
கொள்ளையர்களிடம் பணத்தை இழக்க வேண்டாம் எனவும், தாம் உங்களுக்காக உதவுவதற்காகவே செயற்படுவதாகவும் நம்ப வைத்து பலரிடம் பணத்தை திருடியுள்ளார். தவிர 4,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளையும் திருடியுள்ளார். குறித்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை