கர்நாடகாவில் பரிதாபம் கார்-லாரி நேருக்குநேர் மோதல் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவில் பரிதாபம் கார்லாரி நேருக்குநேர் மோதல் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி

சித்ரதுர்கா: கர்நாடகாவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த 8 வாலிபர்கள் ரமலான் பண்டிகை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன் கோவா சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்றிரவு கோவாவில் இருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டனர்.

அதிகாலை 5 மணிக்கு கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், காரியத் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த சதாம் உசேன், தவுஷிக் அகமது, சதாம், சாதிக் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்தவர்களை உடனடியாக ஹிரியூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆசீப் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஹிரியூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

.

மூலக்கதை