தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் ஆஜர்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆஜரானார். நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், மதுரையில் மக்கள் நீதி மய்யம் புதிய கட்சி தொடக்கத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

அன்றுமுதல் அரசியல் நிகழ்வுகள், அரசியல் பொதுக்கூட்ட மேடை நிகழ்வுகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் கமல் பதிவு செய்திருந்தார். கடந்த 3ம் தேதியன்று தலைமை தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.



அதில் மக்கள் நீதி மய்யத்தின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்வதாகவும். , கட்சி பதிவு செய்யும் விவகாரத்தில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிததிருந்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் விண்ணப்பததை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்தாகவும், பதிவு செய்வது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஜூன் 20ம் தேதி தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை 10. 35 மணிக்கு கமல் ஆஜரானார்.



.

மூலக்கதை